புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல் மாணவர்களின் தலைமுடியை வெட்டிய ஊராட்சி தலைவரை பாராட்டும் உள்ளூர் மக்கள்..
விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராம அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பள்ளிக்கே சென்று சிகை அலங்காரம் செய்தது அனைவரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த அரசு பள்ளியில் ஆனாங்கூர், திருப்பாச்சனூர், பில்லூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சார்ந்த மாணவ மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர் காவல் துறையினர் செய்யும் சிகை அலங்காரம் போல் நெருங்க சிகையை சரி செய்து மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனவும் இதனை பள்ளி ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தவிட்டிருந்தார்.
இந்நிலையில் பில்லூர் அரசு பள்ளியில் மாணவர்கள் சிலர் குரூப்பாக புள்ளிங்கோ ஸ்டைலில் அதிகளவு முடிவைத்து கொண்டு பள்ளிக்கு வருகை புரிந்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பா மற்றும் இதர ஆசிரியர்கள் மாணவர்களை சரியாக முறையில் சிகை அலங்காரம் செய்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
ஆசிரியர்கள் கூறியதை மாணவர்கள் கேட்காமலும், தலை முடியை வெட்டாமல் மீண்டும் பள்ளி வருகைபுரிந்ததால் பில்லூர் ஊராமன்ற தலைவர் சித்திரை சேனாவிடம் பள்ளி மாணவர்களிடம் எவ்வளவு கூறினாலும் தலைமுடியை வெட்டாமல் புள்ளிங்கோ ஸ்டைலில் வருவதாக பள்ளி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரசேனா அரசு பள்ளிக்கு சென்று இன்று அதிகளவு முடி வைத்திருந்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே தலையை முடியை தனது நண்பர்களுடன் இணைந்து வெட்டினார். ஊராட்சி தலைவர் பள்ளி மாணவர்களின் முடியை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.