விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த முன்னூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது ஶ்ரீ ஆடவல்லீஸ்வரர் ஆலயம். இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. இன்று அதிகாலை சரியாக 4:16 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் பிரவேசித்தார்.
அப்போது குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குருபெயர்ச்சி விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து குருபகவானை தரிசித்து சென்றனர்.
அதேபோல,விழுப்புரம் காமராஜர் வீதியில் அமைந்துள்ள 90 அடி உயரமுள்ள பிரசித்த பெற்ற ஸ்ரீ ஜெயஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் 1 ம் தேதி பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரனோ தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஆஞ்சநேயர் சுவாமிக்கு பாலாபிஷேகமும், நடைபெறாமல் இருந்த நிலையில் கொரோனோ தளர்வுக்களுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று ஐந்தாயிரம் லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் குளத்தில் அமைந்துள்ள 90அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16வது ஆண்டாக ஐந்தாயிரம் லிட்டர் பாலினை மின் மோட்டார் மூலம் சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.
மேலும் பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். மேலும் சுவாமிக்கு தங்க மாலை அணிவித்து இருந்தனர். இந்த தரிசித்த பக்தர்கள் காத்திருந்து வழிபட்டு சென்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.