தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் “சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு” என்ற அடிப்படையில்,
விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 33-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு விழாவிற்கு விழுப்புரம் கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் உதவி பொறியாளர்கள், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ- மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை கொடுத்தனர்.
அப்போது மாணவர்கள் மத்தியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்து விதிமுறைகளையும், சைகைகளையும் பின்பற்றினால் சாலை விபத்துகளைத் தடுக்க முடியும். வாகனத்தில் அதிகம் பழுது ஏற்படாமலும், வாகனத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏதும் நேராமலும் தடுப்பதால், சாலை விபத்துகள் தவிர்க்கப்படும்.
வாகனம் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனங்களை அதிவேகமாக இயக்கக் கூடாது. வேகத்தடைகளை கவனித்து செல்ல வேண்டும். எதிரே வரும் மற்றவர் மீது அக்கறை கொண்டு நடக்கவேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனை தொடர்ந்து மாணவ- மாணவிகள் அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.