தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காலையில் அதிக உஷ்ணமும், இரவில் புழுக்கமும் தாங்க முடியாமல் மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
வெயிலின் உஷ்ணத்தில் இருந்து காத்துக்கொள்ள அதிக அளவில் குளிர்பானங்கள் மற்றும் பழங்களைக் நாடி செல்கின்றனர். அதுபோல கோடை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி குடிக்கும் கூல்டிரிங்ஸ் என்றால் அது லெமென் ஜூஸ் தான். கடைகளில் மட்டும் இல்லாமல் வீட்டிலேயும் வெயில் காலத்தில் அதிகளவில் எலுமிச்சை ஜூஸ் பயன்படுத்தி வருகின்றோம் காரணத்தால் சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் இதன் விலையும் அதிகரித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை தற்போது ஒரு எலுமிச்சை 15 ரூபாயும், ஒரு கிலோ 250 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. ஒரு மூட்டையின் விலை ரூபாய் 6500 லிருந்து 7000 வரை விற்பனையாகிறது. சந்தைகளிலும் பொதுமக்கள் எலுமிச்சை பழங்களைத் தேடி தேடி வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் எலுமிச்சை பழத்திற்கு திடீரென மவுசு கூடியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து எலுமிச்சை பழ வியாபாரி ராஜேந்திரன் கூறுகையில், நாங்கள் எம். ஜி ரோடு மார்க்கெட்டில் , எலுமிச்சை பழம் விற்பனை செய்து வருகிறோம். எனக்கு இன்னும் சில வியாபாரிகளுக்கு திருச்சியிலிருந்து எலுமிச்சை பழங்களை கொண்டு வந்து விழுப்புரத்தில் வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த மாதங்களை விட தற்போது எலுமிச்சம்பழ வியாபாரம் நல்ல முறையில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இரண்டு ரூபாய்க்கு மூன்று ரூபாய்க்கு விற்பனையான எலுமிச்சை பழம் தற்போது 15 ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு மூட்டையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வாங்கிட்டு வருவோம் ஆனால் தற்போது மூட்டையின் விலை 6500 ரூபாயிலிருந்து 7,000 ரூபாய் வரை விற்பனைக்கு போகிறது.
பொது மக்களும் கோடை வெப்பத்தின் கஷ்டத்திலிருந்து தவிர்த்துக் கொள்ள, சாறு நிறைந்த பழங்களை அதிக அளவில் வாங்குகின்றனர். அதில் முக்கிய பழமான எலுமிச்சை பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர் இதனால் எங்களுக்கு வியாபாரம் நல்ல முறையில் போகிறது என மகிழ்ச்சியுடன் கூறினார் வியாபாரி ராஜேந்திரன்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.