தமிழக முதலமைச்சர்
ஸ்டாலின் இலங்கையில் நிலவும் பொருளாதார நிதி நெருக்கடியால் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவ நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்ததின் பேரில்
விழுப்புரம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் ஒன்றினைந்து உண்டியல் மூலமாக4 ஆயிரதிற்கும் நிதி திரட்டிய சம்பவம் அனைவரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நிதி நெருக்காடியால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்திலிருந்து இலங்கை தமிழர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை தொலைக்காட்சி வாயிலாக பார்த்த விழுப்புரம் அருகே உள்ள அன்னிச்சம்பாளையம் கிராமத்தை சார்ந்த ஆறாம் வகுப்பு மாணவி சிந்துஜா தனது பள்ளி தோழிகளான ஜெனிலினா, ரக்ஷிகா,அனுஷ்கா, ஆதரவன், சபரி ஆகிய ஐந்து பேர் இணைந்து தங்கள் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் கிராமமக்களிடையே உண்டியல் மூலமாக நிதி திரட்டினர்.
அரசு பள்ளி மாணவிகள் ஒன்றினைந்து நிதி திரட்டியதில்4 ஆயிரதிற்கும் ரூபாய் சேர்ந்ததை அடுத்து திரட்டப்பட்ட நிதியை தனது நடுநிலைபள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைத்து தமிழக முதலமைச்சரின் இலங்கை வாழ் தமிழர்கள் நிவாரண நிதிக்கு அனுப்ப கூறியுள்ளனர். நிதியை பெற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சிறுமிகள் ஒன்றிணைந்து இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.