பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவாமாத்தூரில் தேர் திருவிழா. விமரிசையாக கொண்டாப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் பெற்றனர்.
விழுப்புரம் அடுத்த ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவாமாத்தூர் என்ற கிராமம். இயற்கை எழில் சூழ்ந்த இந்த கிராமத்தில் சிறப்பு மற்றும் பழமை வாய்ந்த சிவன், அம்பாள் என்று தனி கோயில் உள்ளது. இதுவே இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். தேவாரம் பாடப்பெற்ற 274- ல் 53வது தலமாகவும் விளங்குகிறது.
தற்போது, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்த திருவாமத்தூர் சிவன் கோயிலுக்கு, இன்று விமரிசையாக தேர் உற்சவம் நடைபெற்றது.
இந்த தேர் உற்சவத்திற்கு விழுப்புரம் பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்தனர். தேரோட்டத்தினை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு கோயிலின் வாயிலில் இருந்து பம்பை - உடுக்கை, மேளதாளங்கள் முழங்கதேருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் பெற்று சென்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.