நாளை (24/01/22) மின்தடை - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை ( 24/01/22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மின்தடை :-
தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கூடலூர் அருகே உள்ள வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை ( திங்கட்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆங்கூர் பாளையம், குள்ளப்பக்கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தம்ன்பட்டி, சுருளிப்பட்டி நாராயண தேவன்பட்டி, லோயர்கேம்ப், மணலாறு, ஹைவேவிஸ், மேகமலை இரவங்கலாறு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், லோயர் கேம்ப் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.