தேனி மாவட்டம், தேனி நகர்புற பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை ( 20. 01.2022) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மின்தடை :-
தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தேனி அருகே உள்ள வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ( வியாழக்கிழமை ) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் , தேனி புது பேருந்து நிலையம், தேனி தொழிற்பேட்டை, அரப்படித் தேவன் பட்டி, கருவேல் நாயக்கன்பட்டி, சிவாஜி நகர், என் ஆர் டி மெயின் ரோடு, மதுரை ரோடு , பாரஸ்ட் ரோடு , வடபுதுபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை ( 20/01/22 ) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது
இதனால் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் , தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.