தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே உள்ள ராசிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (08/04/22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
மின்தடை :-
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை ((ஏப்ரல் 8 - வெள்ளிக்கிழமை ) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அதன்படி ராசிங்காபுரத்தை சுற்றி உள்ள கிராமங்களான ராசிங்கபுரம், சிலமலை, டி ஆர் புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சுப்புலாபுரம்,பொட்டிபுரம், சில்லமரத்துப்பட்டி, மல்லிகாபுரம், திம்மி நாயக்கன்பட்டி, சின்னபுத்திபுரம், சுந்தரராஜபுரம், தர்மத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் நாளை காலை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று மின் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் ராசிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.