காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைத்து, ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சின்னமனூர் காவல் நிலைய வளாகத்துக்குள் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் நூலகம் :-
தேனி மாவட்டம் சின்னமனூர் நகர காவல் நிலையத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே தலைமையில் நூலகத்திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு போடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். காவல் ஆய்வாளர் சேகர் ஏற்பாட்டின் பேரில் காவல் நிலைய வளாகத்திற்குள் நூலகம் திறக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமரா, குடிநீர் மற்றும் இயற்கைச் சூழலோடு இந்நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில், காவல் நிலையத்திற்கு வருகை தரும் அனைவரும் பயன் பெறும் வகையில் ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைத்து, ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், காவல் நிலையத்தை நாடி வரும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உகந்த இடமாக மாற்ற முடிவெடுத்து சின்னமனூர் காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் கொடையாளிகளின் உறுதுணையோடு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், \" காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வரும் மக்கள் பெரும்பாலும் ஒரு வித மன அழுத்தத்துடன் வருகின்றனர். மன அழுத்தத்துடன் காவல் நிலையம் வரும் பொதுமக்களை மன அமைதி ஏற்பட செய்திடவும், காவல் நிலையத்தை பார்த்து அச்சப்படுவதை தவிர்க்கவும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்தால், குற்றங்களை குறைக்க முடியும் என்ற அடிப்படையிலும், காவல் நிலையத்தின் ஒரு பகுதியில் நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது\" என்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.