தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த விவரம்...
மழை பொழிவு :-
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் லேசான மழையும், ஒரு சில பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது.
போடி நாயக்கனூர் பகுதியில் 0.4 மில்லி மீட்டர் மழையும், பெரியாறு அணை பகுதியில் 0.6 மில்லிமீட்டர் மழை அளவும், தேக்கடி பகுதியில் 0. 8 மில்லிமீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.
நீர்மட்டம் :-
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, சண்முகநதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் விவரங்கள் ...
71 அடி கொள்ளளவு கொண்ட
வைகை அணையில் தற்போதைய நீர்மட்டம் 68.54 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 35 கனஅடியாக உள்ளது. 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
மஞ்சளாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 33.90 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 57 அடியாகும். நீர்வரத்து ஏதுமில்லை. நீர் வெளியேற்றம் இல்லை.
126.28 அடி உயரம் கொண்ட
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 92.16 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 131 கன அடி . 03 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
52.55 அடி உயரம் கொண்ட
சண்முக நதி அணையின் நீர்மட்டம் 26.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 4 கனஅடி . தண்ணீர் வெளியேற்றம் இல்லை.
142 அடி உயரம் கொண்ட
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.75 அடியாக உள்ளது. நீர்வரத்து 850 கன அடி. 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.