தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் மாசி மாதம் சிவராத்திரி முன்னிட்டு, கைலாசநாதர் கோவிலில் வழிபடவும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் ஏராளமானோர் குவிந்தனர்.
சுருளி அருவி :-
சுருளி அருவியில் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் கூட்டம் கூடுவதை பார்க்க முடியும்.
குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை நாட்களில் அதிகமான பக்தர்கள் கூடுவது வழக்கம். அதேபோல சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரி நாளிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பதால் அதிகமான பக்தர்கள் கைலாசநாதரை வழிபட இன்று சுருளி அருவியில் குவிந்தனர்.
அந்த வகையில், இன்று மாசி மாதம் சிவராத்திரியை முன்னிட்டு சுருளி அருவியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வழிபட தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் சுருளி அருவியில் குவிய தொடங்கினர்.
இன்றைய சிவராத்திரி நாளில் சிலர் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சுருளி அருவியில் நீராடி திதி கொடுத்தனர்.
மேலும் அங்குள்ள நவக்கிரகங்களை வழிபட்டு, 9 குருக்களுக்கும் அன்னதானம் வழங்கியும் பொதுமக்கள் வழிபாடு நடத்தி சென்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.