15
தேனி மாவட்டம்
தர்மபுரி கிராமத்தில் உள்ள காளியம்மன் திருக்கோவிலில், 3 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மனை தரிசித்தனர் .
கோவில் திருவிழா :-
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது . தர்மபுரி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருவிழா நடைபெற்றதால், ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீச்சட்டி, முளைப்பாரி, காவடி எடுத்து அம்மனை தரிசித்தனர். மேலும் காவடி ஆட்டம், புலி ஆட்டம், சிலம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் திருவிழாவில் காண்போரை பரவசம் அடையச் செய்தது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.