ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தின் ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, முதுகுளத்தூர், ஆகிய பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
குறைதீர்ப்பு கூட்டம் நடந்து முடிந்தபின்பு, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனமும், தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 13 பெட்ரோல் ஸ்கூட்டர்,
மோட்டார் பொருத்திய 10 தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை 34 மாற்றுத்திறனாளிகளுக்கு 13 லட்சத்து 82 ஆயிரத்து 366 ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினார்.
இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளின் வழங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் உத்தரவிட்டார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.