ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முதன்முதலில் செய்து சாதனை படைத்த மருத்துவர்கள், இரண்டு நோயாளிகளுக்கு 8 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றது. இங்கு ராமேஸ்வரம் வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும், 500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் முனியம்மாள் என்ற 55 வயது மூதாட்டிக்கு முழங்கையில் மூட்டு வலி கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நல்ல மருது (65) என்பவருக்கு முழங்காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு வந்த இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, மூதாட்டி முனியம்மாவுக்கு 4 மணி நேரமும் நல்ல மருதுவிற்கு 4 மணி நேரமும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து இராமேஸ்வரம் மருத்துவமனையில் பணியாற்றும் ஆதித்யா தாகூர், மனோஜ், பிரபாகரன் மற்றும் வினிதா ஆகிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தற்போது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த இரண்டு பேரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருவதால் முதல் முதலில் ராமேஸ்வரம் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளதை ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.