திருவாடானை திரெளபதி அம்மன் கோவில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு மகாபாரத போரின் 17ம் நாள் நிகழ்வாக திரெளபதி வேடமிட்டு வீதிஉலா மற்றும் முடியை அள்ளி முடியும் நிகழ்வு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பராமரிப்பில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இக்கோவில் பராமரிக்கப்பட்டு தெய்வங்காளாக தர்மர் மற்றும் திரெளபதி அம்மன் உள்ளது.
இக்கோவில் பங்குனி உற்சவ விழா கடந்த மார்ச் 24–ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வோர்நாளும் சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்று வந்தது.
இதனைதொடர்ந்து, இன்று 10ம் நாள் திருவிழா நிகழ்வாக மகாபாரத போரின் 17ம் நாள் நிகழ்வினை நினைவு கூறும் வகையில் போரில் வெற்றி பெற்றவுடன் தனது தலை முடியை அள்ளி முடியும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரெளபதி அம்மன், கருப்பர், காளி வேடமிட்டு திருவாடானை நகர் முழுவதும் சுற்றி வீதி உலா வந்தனர். இவர்களை பொதுமக்களும் பக்தர்களும் வழிபட்டனர். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும், எத்தனையோ ஆண்டுகளை கடந்து இன்றளவும் விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.