ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் வெள்ளி திருத்தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் ஆடி திருவிழா மற்றும் மாசி திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவிலில் கடந்த 21ம் தேதி சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது,
இந்த மாசி திருவிழாவானது 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது, காலை, மாலை என இருவேளைகளில் சுவாமி அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து செல்வார்.
அதனைத் தொடர்ந்து அருள்மிகு சுவாமி அம்பாள் வெள்ளி தேரில் வைக்கப்பட்டு , பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகினார், திருத்தேரில் வைக்கப்பட்ட சுவாமி அம்பாளை தமிழகம் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நான்கு ரத வீதிகள் வழியாக வெள்ளி திருத்தேரை இழுத்து வந்தனர்,
பின் கோவிலுக்குள் சங்குகள் முழங்க 16 வகையான அபிஷேகம் இராமநாதசுவாமிக்கு நடைபெற்றது.
இரண்டு வருடங்களுக்கு பின் வெள்ளி திருத்தேர் நான்கு ரதவீதிகளிலும் உலா வந்ததால் உள்ளூர் பொதுமக்கள் மகிழ்ச்சியாக சுவாமி தரிசனம் செய்தனர். மற்றும் ஏராளமான வடமாநிலத்தவர்கள் வருகை தந்து இரவு முழுவதும் விழித்திருந்து நேர்த்திகடன் முடித்து விட்டு சென்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.