உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு நாட்கள் தொடங்கிய நிலையில் இருந்தே, வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணப் பட்டுவாடாவை தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்து நிலையம், ரயில் நிலையம், சோதனைச்சாவடி என அனைத்து முக்கிய பகுதிகளும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாகன சோதனையின்போது எந்த ஒரு முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் அனைத்தும் அந்தந்த நகராட்சி அல்லது பேரூராட்சி அலுவலங்களில் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 24 நபர்களிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 29 லட்சத்து 89ஆயிரத்து 820 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.