ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சுப்புராயபுரம் ஸ்ரீ முனிஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
பரமக்குடி அருகே சுப்புராயபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முனிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, கோ பூஜை, கஜ பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, கால பூஜை, ஸ்பர்ஷாஹூதி, நைலோன் மீலனம், 108 திரவியாஹூதி, மஹா பூர்ணாஹூதி மற்றும் மஹா பூர்ணாகுதி ஆகிய பூஜைகள் நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு ஊற்றப்பட்டது. இதையடுத்து, குடமுழுக்கு திருவிழா சிறப்பாக நடைபெற்ற பின் முனிஸ்வரர் கோவிலில் உள்ள முனிஸ்வரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீ கருப்பண்ணசாமி பாலநாகம்மாள், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.