ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை வைத்து மீன் பிடிக்கப் பயன்படும் 120 கிலோ எடை கொண்ட இரும்பு உருளையை 5 விசை படகுகளில் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மீன்வளத்துறை அதிகாரிகள்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்
இந்நிலையில், நேற்று ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த இரண்டு விசைபடகையும், 16 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்று காலை சென்னை வந்தனர் சென்னை வந்த பின் தொடர்ந்து அவள் தனி வாகனம் மூலம் ராமேஸ்வரம் வந்து கொண்டு உள்ளனர்.
இதையடுத்து, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்களுடைய படகுகளை கடலில் நங்கூரமிட்டு ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவராமசந்திரன் அறிவுறுத்தலின் பேரில் மீன்வளத்துறை ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் படகுகளை ஆய்வு செய்தனர்.
விசைப்படகுகளில் ஆய்வு செய்ததில் அந்தோணி லிவிங்ஸ்டன், மில்டன், செல்வம், அண்ட்ரன், அந்தோனி கில்டஸ் ஆகியவர்களின் ஐந்து விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய 120 கிலோ எடை கொண்ட இரும்பு உருளையை பறிமுதல் செய்து மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஜந்து இரும்பு உருளைகள் மீன்வளத் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.