ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த கிறிஸ்டல் பெத்தலின் என்ற போதை பொருள் பறிமுதல் ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இதில் சம்பந்தப்பட்ட இருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க செல்வதற்காக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வந்தனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஒரு விசைப்படகில் கிரிஸ்டல் பெத்தலின் என்ற போதை பொருள் கடத்தப்பட உள்ளதாக ராமேஸ்வரம் குற்றத் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, குற்றப்பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பாம்பன் புயல் காப்பகம் பகுதியைச் சேர்ந்த தஸ்மன் (28) அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தங்கச்சிமடம் பொட்டேல் நகரைச் சேர்ந்த பிரைட்வின் இதை கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். பின்பு இருவரையும் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த ஒன்றை கிலோ எடை கொண்ட கிரிஸ்டல் பெத்தலின் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து ராமேஸ்வரம் நகர் போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து இதில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை தீவிரமாக வலைவீசி தேடி வருவதோடு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை தடவியல் துறைக்கு அனுப்பி உள்ளனர்.
மேலும் ராமேஸ்வரம் தீவு பகுதியில் இந்திய கடலோர காவல்படை, கியூ பிரான்ச், மரைன் போலீசார் மற்றும் குற்றத் தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் சர்வ சாதாரணமாக ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.