பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற இழுவை கப்பல் மற்றும் சரக்கு கப்பல்கள், ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து பார்வையிட்டு ரசித்து சென்றனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வெளி மாநிலத்திற்கு செல்லும் கப்பல்கள் கடல்சார் துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு கடல்சார் வாரியம் துறைமுக அலுவலகத்தில் அனுமதி பெற்று பாம்பன் துறைமுக அதிகாரிகள் முன்னிலையில் தூக்கு பாலம் திறக்கப்பட்டது.
இதையடுத்து, இழுவை கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்கள் கேரளாவில் இருந்து கிருஷ்ணா பட்டினத்திற்கும், கொல்கத்தாவிலிருந்து கர்நாடகாவிற்கு கப்பல்கள் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்றன.
கப்பல்கள் கடந்து செல்லும் காட்சியை பாம்பன் பாலத்திற்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து சென்றனர். இதனால் பாம்பன் பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ramanathapuram