இன்று முதல் தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி உள்ளது. இதில்
நாமக்கல் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 9,729 மாணவர்கள், 10,138 மாணவிகள் என மொத்தம் 19,867 பேர் எழுதுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத மாவட்டத்தில் 82 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனிடையே அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு அறை அனுமதி சீட்டுகள் முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
தற்போது இன்று தேர்வு தொடங்கியது அடுத்து மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு காலையில் நேரமாகவே வர தொடங்கினர். தேர்வு துவங்குவதற்கு முன்பாக தலைமை ஆசிரியர் மூலம் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் முதல் தனியார் பள்ளி மாணவர்கள் வரை தேர்வு எழுதுவதற்கு உற்சாகத்துடன் சென்றனர்.
இதேபோல் பதினொன்றாம் மாணவர்கள் மாணவிகள் மொத்தம் 19,842 பேர் எழுத உள்ளனர். 10–ம் வகுப்பு தேர்வை 304 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் சேர்ந்த 20,662 மாணவர்கள், மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து நாமக்கல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வினாத்தாள்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன், பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டு உள்ளன.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.