நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலின் வைகாசி விசாக தேர்த் திருவிழா வருடாவருடம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா நடத்தப்படவில்லை. தற்போது இந்தாண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனையொட்டி அதற்கான வேலைகள் தொடங்கப்பட உள்ளது.
இந்த வைகாசி விசாகத்தன்று நடைபெறும் தேர் திருவிழாவில் விநாயகர் தேர், பெருமாள் தேர், செங்கோட்டுவேலவர் தேர், அர்த்தநாரீஸ்வரர் என இழுக்க கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த தேர்கள் மிகவும் பழமையான ஒன்றாகவும் இருக்கிறது.
இதனிடையே மிகப்பழமையான தேர் களை புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக விநாயகர் தேர் புதிதாக கட்டமைக்க 16 லட்சம் ஒதுக்கப்பட்டு புதிய தேர் அமைக்கப்பட்டது.
தற்போது தேர் புதிதாக புனரமைப்பு செய்யப்பட்டதை அடுத்து வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேரை பூக்கள், வாழைமரம் என அலங்கரிப்பட்டும், சிறப்பு பூஜைகளும் செய்து பின்னர் விநாயகர் தேரில் எழுந்தருளினார். அதன்பின் தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நான்கு ரத வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். இந்த நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தும், சாமி தரிசனமும் செய்தனர்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.