தனியார் துறை நிறுவனங்களையும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள நபர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தனியார் துறை தொடர்புடைய வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று வருகிறது.
இந்த வாரத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (04.03.2022) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், விற்பனை பிரதிநிதி, ஏரியா மேலாளர், டீம் லீடர், சூப்பர் வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு ஆட்களைதேர்வு செய்ய உள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர், பிளஸ்-2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்து வித கல்வித்தகுதி உள்ளோரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இந்த முகாமானது முற்றிலும் இலவசமாக நடைபெறுகிறது. வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். இம்முகாமில் பங்கு பெறுபவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: சே.மதன்குமார் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.