கடந்த வாரம் நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் வெப்ப அயற்சி மற்றும் மேல் மூச்சுக்குழல் அயற்சி, இராணிக்கெட் நோய் தாக்குதலால் இறந்திருப்பது தெரியவந்தது. எனவே பண்ணையாளா்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். மேலும் வெயிலின் தாக்கத்தை குறைக்க நீா் தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும். கோழிகளை பாதுகாக்க லசோட்டா தடுப்பூசியை கோழிகளுக்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 104 டிகிரியைக் கடந்து காணப்படும்.கடந்த வார வானிலையை பொருத்த வரை பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 102.2 மற்றும் 78.8 டிகிரியாக நிலவியது.
அதுமட்டுமின்றி அடுத்த நான்கு நாள்களுக்கு மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பகல் வெப்பம் 104 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 80.6 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் தெற்கு மற்றும் தென்மேற்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசும் என்று என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.