நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் வெளுத்து வாங்கினாலும் கடந்த சில நாட்களாக மாவை நேரத்திலும், இரவு நேரங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய கோடை
மழை பெய்து வருகிறது.
இதனிடையே காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள தோட்டக்கலை பயிர்களான வாழை, மா, பப்பாளி போன்ற பழ மரங்கள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. சேத விபரம் குறித்த தகவல்களை மாவட்ட அளவில், தோட்டக்கலைத்துறையின், 96296 62329 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வட்டார அளவில் தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டும் விபரங்ளை தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு எண்கள் விவரங்கள்
எலச்சிப்பாளையம் - 86609 59576
எருமப்பட்டி - 94432 15153
கொல்லிமலை - 94432 15153
ராசிபுரம் - 94439 43559
நாமகிரிப்பேட்டை - 83446 71576
வெண்ணந்தூர் - 94432 88958
சேந்தமங்கலம் - 93455 25000
புதுச்சத்திரம் - 95977 45032
நாமக்கல் - 87607 51370
பரமத்தி - 97900 09161
கபிலர்மலை - 99768 11991
மோகனூர் - 94430 25428
திருச்செங்கோடு - 86609 59576,
பள்ளிபாளையம் - 90959 90799,
மல்லசமுத்திரம் - 98655 87071.
மேலும் கடந்த மே 1, 2ம் தேதி ஏற்பட்ட பயிர் சேத விபரம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பும் வகையில், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் முடிவில் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.