நாமக்கல் மாவட்டத்தில் வீடு கட்ட நிதி உதவி பெற கட்டுமான தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் வீட்டுமனை வைத்திருந்தால் தாங்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்றிருக்க வேண்டும். பதிவு பெற்று 3 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சொந்தமாக கான்கிரீட் வீடு இருத்தல் கூடாது. அரசின் வேறு எந்த இலவச வீட்டு வசதி திட்டங்களிலும் பயன்பெற்றிருக்க கூடாது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். தொழிலாளியின் பெயரில் 300 சதுர அடி அல்லது 28 சதுர மீட்டர் வீட்டுமனை இருக்க வேண்டும்.
தொழிலாளியின் பெயரில் வீட்டுமனை பட்டா இருக்க வேண்டும் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுப் பட்டா இருத்தல் வேண்டும். மேலும் கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து www tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.