நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு நிலவும்
வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெயிலின் தாக்கத்தால் கோழிகளுக்கு எதிா்ப்பு சக்தி குறைந்து வருவதாக நாமக்கல் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கோழியின் நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலும் வெப்ப அயற்சி மற்றும் நச்சுயிரி பாதிப்பால் இறக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது.
பண்ணையாளர்கள் வெப்ப அயற்சியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் தேவைப்படும் நேரத்தில் நீர்தெளிப்பான் உபயோகிக்கலாம், தீவனத்தில் நுண்ணூட்டச் சத்துக்களை உபயோகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12-ம் தேதி மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும் குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 45 முதல் 50 சதவீதமாகவும் இருக்கும் என்று நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.