கொரோனா நோய்த்தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்கு, இறந்தவர்களின் இறப்புசான்று கொண்டு அரசு இணையதளம் மூலமாகவும், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டு நெறி முறைகளின்படி வருகின்ற 18ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விண்ணப்பிக்கபடும் மனுக்கள் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,476 பேருக்கு 50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு 20.3.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வருகிற 18-ந் தேதிக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க முடியாதவர்கள், இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.
மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனுசெய்து நிவாரணம் பெற்று பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.