மதுரை தெப்பக்குளத்தை அடுத்த பழைய குயவர் பாளையத்தைச் சேர்ந்தவர்நாகராஜன், (46 வயது). இவருடைய மனைவி லாவண்யா, (34 வயது).
நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராக பணியாற்றி வந்தவர். இவரும் இவருடைய மனைவியும் மார்ச் 2 அன்று வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் அன்றிரவு வீட்டில் தூக்கிட்டு இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி தகவலறிந்த தெப்பக்குளம் காவல்துறையினர் உடல்களைகைப்பற்றிபின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு இராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு உடல்களை அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்பங்குச்சந்தை முதலீட்டுப் பிரச்சனையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ள தம்பதியினர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிகிறது.
இதனையடுத்து, தம்பதியின் உடலைக் கைப்பற்றியதெப்பக்குளம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.