மதுரை காளவாசல் பைபாஸ் சாலை போடி லைன் மேம்பாலம் அருகே உள்ளது கிரீன் வின்ஸ் அப்பார்ட்மெண்ட். அதனருகே அடர்ந்த முட்பகுதி திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
பகுதி மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மதுரை டவுன் மோட்டார் வாகன நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் அரைமணி நேரத்திற்கு மேல் போராடி அணைத்தனர். யாரேனும் சிகரெட் அல்லது பீடிகளை பற்ற வைத்து அணைக்காமல் தூக்கி எறிந்திருக்கலாம். அது காய்ந்த முள் பகுதியில் விழுந்து தீ பிடிக்கத் தொடங்கி இருக்கலாம் என தீயணைப்புத் துறை வீரர்கள் கூறினர்.
எனினும் துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் முற்றிலுமாக தீயை அணைத்தனர். குடியிருப்பு பகுதியான அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் சுமார் அரைமணிநேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.