மதுரை அழகர்மலை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடி ரூபாய் பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 12-ம் தேதி அழகர் கோயிலில் சித்திரை திருவிழா துவங்கியது. மூன்றாம் நாள் ஏப்ரல் 14-ம் தேதி மதுரைக்கு அழகர் புறப்பட்டார். அப்போது அழகர் ஊர்வலத்தில் தள்ளு உண்டியல்கள் 20, பெட்டி உண்டியல்கள் 19 என மொத்தம் 39 உண்டியல்கள் புறப்பட்டன.
வண்டியூர் வரை அழகர் ஊர்வலம் சென்று அழகர்மலைக்கு திரும்பி வந்த வழியெங்கும் பக்தர்கள் அழகரை தரிசித்து உண்டியலில் காணிக்கைகள் அழகருக்கு செலுத்தினர். திருவிழா முடிந்து தற்போது அந்த உண்டியல்கள் சீல் உடைத்து எண்ணும் பணிகள் நடந்தன.
கடந்த ஏப்ரல் 29 அன்று முதற்கட்டமாக 20 தள்ளு உண்டியல்களில் கிடைத்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில் 75,11,574 ரூபாய், 10.100 கிராம் தங்கம், 347 கிராம் வெள்ளி ஆகியவை கணக்கிடப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக இன்று மே 5 அன்று இரண்டாம் கட்டமாக பெட்டி உண்டியல்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இவை சிறிய உண்டியல்கள் என்பதால் தங்கம், வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக விழுவதில்லை. மொத்தம் 27,61,514 ரூபாய் கணக்கிடப்பட்டது.
இதன் அடிப்படையில் இரண்டு கட்டமாக உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் மொத்தம் 1,02,73,088 ரூபாய்.
முதற்கட்ட உண்டியல் எண்ணிக்கை அப்போதைய செயல் அலுவலர் அனிதா தலைமையிலும், இரண்டாம்கட்ட உண்டியல் எண்ணிக்கை தற்போதைய புதிய செயல் அலுவலர் எம்.ராமசாமி தலைமையிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.