கொரோனா வேகம் எடுத்துள்ள நிலையில், தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, உடல்நிலை மோசமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதிய அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பதாகவும், கூடுதலாக கொரோனா படுக்கை அறைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மருத்துவக் கல்லூரி இயக்குநர் மருத்துவர் திருஞானசம்பந்த மணி கூறியதாவது, ‘மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளது. மேலும், அரசு மருத்துவமனை கிடங்கில் அதிகமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையின்றி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த அறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிறப்பு முகாமில் உள்ள நோயாளிகளுக்கு சத்துள்ள உணவுகள் அளிக்கப்பட்டு, அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Virudhunagar