புதுச்சேரி கிருஷ்ணா நகர் 12 வது குறுக்கு தெருவில் வசிக்கும் தையல் கலைஞர் வீர செல்வம். இவரது வீட்டு மாடியில் வசிப்பவருக்கு கொரோனா நோற்று தொற்று உறுதியானது. இதனால் அவரையும் வீட்டில் வசித்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த வீடும் தனிமைப்படுத்தப்பட்டது.
இதனிடையே வீரசெல்வம் தனது வீட்டை பூட்டி லாஸ்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை சாதகமாக்கி கொண்ட மர்ம ஆசாமி, வீட்டு கதவை உடைத்து 20,000 ரூபாய் பணம் மற்றும் 4 பவுன் நகையை திருடி சென்றுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொரோனா பாதித்த அந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்த போலீசாரும் கைரேகை நிபுணர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபட குடியிருப்போர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.