கத்தாரில் 22வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு இந்திய மதிப்பின்படி ரூ.342 கோடி பரிசு தொகையாக ஃபிபா வழங்குகிறது.
கால்பந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த FIFA உலக கோப்பையின் இறுதி போட்டி இன்று நடைபெற இருக்கிறது. கத்தாரில் கடந்த மாதம் 20ம் தேதி மிக பிரமாண்டமாய் தொடங்கிய இந்த தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினா அணியும் பலப்பரீச்சை நடத்தவுள்ளன.
இந்திய நேரப்படி 08.30 மணிக்கு லுசைல் ஐகானிக் மைதானத்தில் தொடங்க உள்ள இந்த போட்டியில் உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.342 கோடியும், தோல்வி அடையும் அணிக்கு ரூ.244 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. முன்னதாக, மூன்றாவது இடம் பிடித்த குரோஷியா அணிக்கு ரூ.223 கோடியும், நான்காம் இடம் பிடித்த மொராக்கொ அணிக்கு ரூ.206 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
பிரேசில், நெதர்லாந்து, போர்ச்சுகல், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், அந்த அணிகளுக்கு தலா ரூ.140 கோடி வழங்கப்படும். அதேபோல், 2வது சுற்றுக்கு தகுதிபெற்ற அமெரிக்கா, செனகல், ஆஸ்திரேலியா, போலந்து, ஸ்பெயின், ஜப்பான், சுவிட்சர்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு தலா ரூ.107 கோடி ஃபிபா வழங்கவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FIFA World Cup 2022