வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமைச்சர்கள் மக்களின் குறைகளை கேட்கவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரோடு பெரியவலசு நான்கு ரோடு, வீரப்பன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், 21 மாத கால ஆட்சியில் எதுவும் திமுக அரசு எதையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
அமைச்சர்கள் புரோட்டா போட்டும், டீ போட்டும் பிரச்சாரம் செய்துவருவதாகவும் மக்களுக்கு நல்லது செய்யதான் அமைச்சராக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற நிலை வந்து விட்டதால் தான், அமைச்சர்கள் வீதி வீதியாக சுற்றுவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: EPS, Erode East Constituency