முகப்பு /செய்தி /Breaking and Live Updates / உடல்நல குறைவால் சென்னை கவுன்சிலர் காலமானர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

உடல்நல குறைவால் சென்னை கவுன்சிலர் காலமானர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

உயிரிழந்த கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்

உயிரிழந்த கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், நாஞ்சில் பிரசாத்தின் குடும்பத்தினர் மற்றும் பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை மாநகராட்சி 165வது வார்டு கவுன்சிலரான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்த நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இதையும் படிங்க: கட்சியில் இருந்து நீக்கியது ரூபி மனோகரனுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி- கார்த்தி சிதம்பரம் ஆவேசம்

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், நாஞ்சில் பிரசாத்தின் குடும்பத்தினர் மற்றும் பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தூண் ஒன்று சரிந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Chennai corporation, CM MK Stalin