சென்னை மாநகராட்சி 165வது வார்டு கவுன்சிலரான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்த நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், நாஞ்சில் பிரசாத்தின் குடும்பத்தினர் மற்றும் பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தூண் ஒன்று சரிந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai corporation, CM MK Stalin