பயணம் என்பது ஒரு வகையான சிகிச்சை. மனதை வளப்படுத்தவும், உடலை ரிலாக்ஸ் செய்யவும், வாழ்நாள் முழுவதும் மெச்சும் அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுக்கொள்ளவும், பயணங்கள் தான் பேருதவியாக இருக்கும். பயணங்கள் நிற்கும் போது மனிதன் வளர்வதை நிறுத்திவிடுகிறான் என்ற சொல்லாடல் கூட உண்டு.
ஒரு சிலருக்கு நண்பர்கள், உறவினர்கள் என்று கூட்டமாக போவது பிடிக்கும். கூட்டமாக கலகலவென்று இருந்தால் தானே ஒரு குதூகலம் இருக்கும் என்பார்கள். ஒரு சிலர் தனியாக சுற்றுவதை சுதந்திரம் என்று நினைப்பார்கள். புதிய நபர்களை சந்திக்கவும், புதிய நண்பர்களை உருவாக்கவும், தங்கள் சொந்த மனதின் ஆழங்களை அறியவும் தனியாக பயணம் செய்ய விரும்புகிறார்கள்.
இருப்பினும், நாம் தனியாகப் பயணம் செய்யும்போது, போகும் இடத்தில் வரக்கூடிய ஆபத்துகள் குறித்த அறிவும், வரும் ஆபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் நாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து, நம்மை நாமே கவனித்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படி, உங்கள் தனி பயணத்திற்கு நீங்கள் தயாராகும் பட்சத்தில், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் இங்கே :
அதீத லக்கேஜ் அதீத சுமை :
தனி பயணம் என்று சொல்லும் பொது உதவிக்கு ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் தேவைப்படும் எல்லாவற்றையும் நாம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற நினைப்பு வரும். ஆனால், அதுவே ஓவர் பேக்கிங்கிற்கு காரணமாகிவிடக்கூடாது. அதி-அவசியமான பொருட்களை மட்டும் எடுத்துச்செல்ல வேண்டும்.
அதிகமாக எடுத்துச் சென்றால் நீங்கள் தான் அதை சுமந்துகொண்டு சூற்ற வேண்டும். அல்லது அந்த பைகளை எங்கே பத்திரமாக வைப்பது என்று தேட வேண்டும். அதுவே கம்மியாக இருந்தால் கையில் வைத்துக்கொள்ளலாம். முடிந்தவரை ஒரே பையில் எல்லா பொருட்களையும் எடுத்து செல்லப் பாருங்கள்.அது தான் எளிதாக இருக்கும்.
அதீத திட்டம் அரசல் புரசலாகும்:
தனியாக பயணம் செய்வது என்பதே நம்மை பற்றி நாம் அறிந்து கொள்வதற்காகத்தான். மெதுவாக ஒவ்வொரு இடத்தையும் பார்த்து ரசிப்பதற்காக தான் பயணங்கள் திட்டமிடப்பட வேண்டும். அதற்கு பதிலாக 2 நாளில் 20 இடங்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஒரு இடத்தை கூட முழுமையாக பார்த்த திருப்தி இருக்காது. அவசர அவசரமாக ஓடியது போல தான் இருக்கும்.
திட்டம் 2 :
எந்த ஒரு பயண திட்டத்தையும் தயாரிக்கும் போது அதன் கூடவே பிளான் B திட்டத்தை கையில் எப்போதும் வைத்திருங்கள். நீங்கள் திட்டமிட்டபடி விஷயங்கள் செயல்படவில்லை என்றால், உடனே இரண்டாவது திட்டத்திற்கு மாறி மீதம் இருக்கும் நேரத்தை சிறப்பாக செலவழித்து வரலாம். நேரமும் வீணாகாது. பயணமும் நிறைவடையும்.
பயணச் செலவுகள் :
தனிப் பயணத்தின் பயணச் செலவை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். தனியாக தானே போகிறோம் எவ்வளவு செலவாகி விட போகிறது என்று ஒருபோதும் நினைத்து விடாதீர்கள். குழுவாக செல்லும்போது ஆகும் செலவை கிட்டத்தட்ட தொட்டுவிடும். தனியாகப் பயணம் செய்யும் போது எப்போதும் கூடுதல் நிதியை காப்பு நிதியாக தனியே வைத்துக்கொள்ளுங்கள். அவசரம் ஏற்படும்போது அது பெரிய உதவியாக இருக்கும்.
இதையும் பாருங்க: சாகச விரும்பிகளுக்கு ஏற்ற உலகின் சிறந்த மிதக்கும் பாலங்கள் லிஸ்ட் இதோ!
மௌனம் :
தனிப் பயணம் என்பது நிறைய அமைதியை உள்ளடக்கியது, அதுவே அதன் அழகு. அமைதியை நிரப்புவதற்குப் பதிலாக, அதைத் தழுவக் கற்றுக்கொள்வது முக்கியம். பயணத்தின் போது புதிய மனிதர்களை சந்திப்பது இயல்பு அவர்களிடம் பேசாமல் இருக்க சொல்லவில்லை. அனால் அழகிய ஒரு மலை பகுதியில் தங்கி இருக்கிறீர்கள் என்றால் அந்த இடத்தின் அழகையும் அமைதியும் நீங்களும் மௌனமாய் இருந்து அனுபவியுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Solo Travel, Travel