மொபைல் போன் வெடித்து அதனால் எட்டு மாத குழந்தை இறந்த செய்தி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவம் பரேலியில் நடைபெற்றுள்ளது. குழந்தை உறங்கிக் கொண்டிருக்கும் அதே கட்டிலில் மொபைல் போன் சார்ஜ் போடப்பட்டு இருந்தது. மொபைல் போன் திடீரென்று வெடித்ததில் குழந்தைக்கு தீவிரமான காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது.
கைக்குழந்தைகள், இளம் பிள்ளைகள், சிறுவர் சிறுமிகளிடம் இருந்து மொபைல் போன்களை பாதுகாப்பாக எச்சரிக்கையாக வைக்க வேண்டும் என்று அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மொபைல்களால் ஏற்படும் பாதிப்புகள்
மொபைல் போன்களில் இருந்து வெளியேறும் எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஆபத்தானதுதான். ஆனால் இந்த ரேடியேஷன்ங்களால் ஏற்படும் ஆபத்து குழந்தைகளுக்கு மிகவும் அதிகம். இதை தவிர்த்து, போன் திரைகளில் இருந்து வைலட் கதிர்கள், பேட்டரி வெடிக்கக்கூடும் என்ற ஆபத்து, ஆகிய அனைத்துமே குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை அதிகரித்துள்ளது.
பெற்றோர்கள் ஏன் மொபைல்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்?
எலக்ட்ரோ மேக்னேட்டிக் ரேடியேஷனால் உண்டாகும் பாதிப்புகள்
நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான் குழந்தைகளும் செய்யும். எனவே பெற்றோர்கள் பெரும்பாலான நேரம் ஃபோனில் செலவழிக்கும் போது குழந்தைகளும் அதையே தான் பின்பற்றும். ஆனால் போன்களில் இருந்து வெளியேறும் எலக்ட்ரோமேக்னடிக் ஃபீல்ட் என்பது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அவர்களுடைய உடல் அமைப்பு மற்றும் உடல் உறுப்புகளில் கூட பாதிப்புகளை உண்டாக்கும். இதன் பெயர் மைக்ரோவேவ் ரேடியேஷன் என்று கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதில் சிரமமாக உள்ளதா..? உங்களுக்கான ஆலோசனைகள்
குழந்தைகள் பிறந்து சில மாதங்கள் வரை முன்னுச்சி என்று கூறப்படும் குழந்தைகளின் தலையின் மேற்பகுதி மூடாமல் திறந்த படிதான் இருக்கும். குழந்தை வளர வளர தான் அந்த பகுதி மூடும். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் மண்டை ஓட்டுப் பகுதி மிகவும் மெலிதாக இருக்கும். இதனால் குழந்தைகளின் மூளை பெரியவர்களை விட எளிதாக ரேடியேஷனை உறிஞ்சும் ஆபத்து இருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு முதல் தீவிரமான வளர்ச்சி குறைபாடுகள் வரை ஏற்படும்.
மொபைல் டிஸ்ப்ளே திரைகளில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி
எலக்டிரானிக் சாதனங்களில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி எவ்வாறு ஒரு நபரை பாதிக்கிறது என்பதைப் பற்றி புதிதாகக் கூற எதுவுமே இல்லை. ஆனால் இது பெரியவர்களை மட்டுமல்ல குழந்தைகளையும் பாதிக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. நல்ல தூக்கம், கண்கள் ஆரோக்கியம், நடத்தை, ஆற்றல் ஆகியவற்றுக்கு இரவுநேரத்தில் அனைத்து சாதனங்களையும் ஸ்விச் ஆஃப் செய்து வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. பெரியவர்களை பாதிப்பதை விட இந்த மொபல்களில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளி குழந்தைகளை 45% அதிகமாக பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது அவர்களின் உடலில் ஒரு விதமான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது.
குழந்தைகள் முன்பு சண்டைப் போடும் பெற்றோர்களே இதையெல்லாம் கொஞ்சம் யோசிங்க..
வெடிக்கும் ஆபத்து
சார்ஜ் போட்டுக்கொண்டே மொபைலில் பேசிக் கொண்டிருப்பது அல்லது நீண்ட நேரம் மொபைல் பயன்பாடு என்ற பல்வேறு காரணங்களால் மொபைல் பேட்டரிகள் வெடிக்கும் அபாயம் உள்ளது. இதற்கு பேட்டரிகள் செயலிழந்து போவது, அல்லது தவறான சார்ஜர்களை பயன்படுத்துவது அல்லது சார்ஜ் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய மின்சார கோளாறு ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பல முறை மொபைல் வாழ்க்கை வெடித்து அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். எனவே மொபைல் பேட்டரிகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் அருகில் எப்பொழுதும் மொபைல் சார்ஜ் செய்யக்கூடாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kids Care, Mobile phone