கொரோனாவால் ஊரடங்கில் இருக்கும் இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு சில ஒழுக்கநெறிகளைக் கற்றுத்தாருங்கள். குறிப்பாக சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுதல் மனிதனுக்குத் தேவையான அடிப்படை ஒழுக்கம் மட்டுமல்லாது ஆரோக்கியமும் கூட.. எனவே இப்போதிலிருந்தே அதற்கு உங்கள் பிள்ளைகளை தயார்படுத்த என்ன செய்யலாம்..?
திரைகளை அணைத்தல் : தூங்கச் செல்வதற்கு முன் டிவி, செல்ஃபோன், லாப்டாப் போன்ற டிஜிட்டல் திரைகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள். குறைந்தது ஒரு மணி நேரமாவது அவர்கள் தூங்கச் செல்லும் முன் டிவி பார்ப்பதை தவிருங்கள்.
தூக்கத்தை தூண்டுதல் : தூங்கும் முன்னரே அறையை தூங்குவதற்கு ஏற்ப அறையை தயார்படுத்துங்கள். அவர்களுக்கு தூக்கம் வரவில்லை என்றாலும் படுக்கை அறைக்குள் படுக்க வையுங்கள். அந்த சூழல் தானாக அவர்களுக்குத் தூக்கத்தை தூண்டும். அந்த அறையில் செஃல்போன் இருக்கக் கூடாது.
எழுதல் அலாரம் : தினமும் சீக்கிரம் எழ குறிப்பிட்ட நேரத்தை குறித்து வைத்து அலாரம் செட் செய்யுங்கள். அந்த நேரத்தில் தினமும் பிள்ளைகளை எழுப்பி விடுங்கள். இப்படி தொடர்ந்து செய்ய அதுவே அவர்களுக்கு தினசரி எழும் நேரமாக மாறிப்போகும்.
காலை உணவு : காலை உணவை சிறப்பாக செய்து கொடுங்கள். அது ஆரோக்கியமான உணவாகவும் இருக்க வேண்டும். அது அவர்களை அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்கும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.