வீட்டில் தேயிலை மர எண்ணெய் (Tea tree oil) இருந்தால் பல வகைகளில் பயன்படும். மருந்து கடைகளிலும் காப்சியூலாக விற்கப்படுகிறது. இதை பலரும் தலையில் நீர் கோர்த்துக்கொண்டால் ஆவி பிடிக்க பயன்படுத்துவார்கள். இது தவிற இன்னும் பல விஷயங்களுக்கும் பயன்படும் என்பது தெரியுமா?
சளி , நீர் கோர்த்தல் : சளி இருந்தால் பருத்தித் துணியில் ஒரு சொட்டு ஊற்றி அதை நுகர்ந்து கொண்டே இருக்க குறையும். சைனஸ் பிரச்னைக்கு ஆவி பிடிக்கலாம்.
பொடுகு நீக்கி : தலையில் பொடுகு இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பில் 8 சொட்டு ஊற்றி கலந்து தலைக்கு தேய்த்துக் குளிக்க பொடுகு நீங்கும்.
கிருமி நீக்கி : சூடான நீரில் வினிகர் மற்றும் தேயிலை மர எண்ணெய் கலந்து அதை கிச்சன் அல்லது எண்ணெய் பிசுக்கு, நீங்காத பிசுக்கு இருக்கும் இடத்தில் தெளித்து துடைத்தால் போகும்.
வாஷிங் மிஷின் கிளீனர் : துர்நாற்றம் அடிப்பது போல் உணர்ந்தால் 10 - 15 சொட்டு விட்டு காலியாக ஓட விடுங்கள்.
இயற்கை வாசனை திரவம் : தேங்காய் எண்ணெய்யில் தேயிலை மர எண்ணெய் கலந்து அக்குள்களில் தடவிக்கொண்டால் வியர்வை பாக்டீரியாக்களை ஒழிக்கும். துர்நாற்றமும் வீசாது.
துணிகளுக்கு வாசனை : துணி துவைக்கும் போது 5 சொட்டு விட்டு பாருங்கள். துணிகள் வாசனையாக இருக்கும்
பிரஷ் கிளீனர் : பல் துலக்கும் பிரஷ் வாடை வருவது போல் இருந்தால், சுத்தமாக இல்லாமல் இருந்தால் தண்ணீரில் 3 சொட்டு தேயிலை மர எண்ணெய் விட்டு கலந்து அதில் பிரஷை ஊற வைத்து கழுவினால் சுத்தமாக இருக்கும்.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.