சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாது இந்தியாவில் பரவலாக பல இடங்களில் மர்ம காய்ச்சல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2020 ல் வைரஸ் நோயின் தாக்கம் மக்களைப் பாடாய் படுத்திய நிலையில், இதுபோன்ற ஒரு வகை வைரஸ் தான் தற்போது மக்களைப் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்ற அச்சம் அதிகளவில் எழுந்தது. இந்நிலையில் இது பருவக்காலங்களில ஏற்படும் ஒரு வகை வைரஸ் எனவும், H3N2 இன்ஃப்ளூயன்ஸா என்கின்றனர் மருத்துவர்கள். எனவே இவ்வகையான காய்ச்சல் வந்தால் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும், அதற்கான மருந்து மாத்திரைகளை உட்கொண்டால் போதும் எனவும் கூறப்படுகிறது.
இன்ஃப்ளூயன்ஸா எவ்வாறு பரவுகிறது?
இன்றைக்கு அதிகளவில் பலரையும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இருமல் அல்லது தும்மல் வரும் போது, அதன் நீர்த்துளிகள் காற்றில் ஒரு மீட்டர் வரை பரவக்கூடியது. எனவே தான் அந்த இடத்தில் மற்றொரு நபர் சுவாசிக்கும் போது, இந்த நீர்த்துளிகள் அவரது உடலுக்குள் சென்று அவரைப் பாதிக்கிறது. கொரோனா வைரஸ் காலக்கட்டத்திலும் இந்த நிலைத் தான் ஏற்பட்டது. இருந்தப்போதும் இதற்கு அச்சம் கொள்ளத்தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள். வைரஸ் நிபுணர்களின் கூற்றுப்படி, காற்று மாசுபாடு H3N2 வைரஸை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. காற்று மாசுபாட்டால் மோசமாக இருக்கலாம். இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, உடல்வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை கூடுதல் பொதுவான அறிகுறிகளாகும்.
H3N2 காய்ச்சலின் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் யார்?
சாதாரண காய்ச்சல் போன்ற ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான் இது. இருந்தப்போதும் ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், கடுமையான சுவாசக் கோளாறுகள் மற்றும் ஆஸ்துமா அத்தியாயங்களைத் தூண்டும் என்பதால், அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். H3N2 மட்டுமல்ல, H1N1 மற்றும் அடினோ வைரஸ்கள் உட்பட பிற வைரஸ்களும் தற்போது மக்களிடம் பரவியுள்ளதால், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் நெரிசலான இடங்களுக்கு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.
H3N2 காய்ச்சலின் அறிகுறிகள்:
இந்த நோய்த்தொற்றுகள் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற சுவாச அறிகுறிகள் மற்றும் உடல் வலிகள், குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிற அறிகுறிகளை ஏற்படுத்தும். இன்ஃப்ளூயன்ஸா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆன்டிவைரல் மருந்துகள் H3N2 விவகாரத்திற்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளைப் பொறுத்தவரை 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வரக்கூடும். மேலும் குழந்தைகளின் உடல் மற்றும் முகம் நீல நிறமாக மாறக்கூடும். மார்பு, தசை வலி மற்றும் நீர்ப்போக்கு ஏற்படலாம்.
H3N2 காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதல்கள்:
மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் முடிந்தவரை நிறைய தண்ணீர் உட்கொள்ளுங்கள் மற்றும் வெளி இடங்களுக்குச் சென்றால் மக்களுடன் பழகுவதைத் தவிர்க்கவும்.
ஒருவேளை உங்களின் உடல் நலத்தில் மேம்பாடு ஏற்படவில்லை என்றால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.
Also Read : இன்ஃபுளுவன்சா தொற்றுக்கு சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது சரியா..? மருத்துவர்கள் சொல்வது என்ன..?
நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் மற்றும் கொமொர்பிடிட்டிகள் உள்ளவர்கள் மிகவும் தீவிரமான நோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் இருப்பார்கள் என்பதால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆன்டிபாடிக் மருத்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fever, Sore throat, Virus