உலக அளவில் பலருக்கும் வரும் பொதுவான உடல் நலப்பிரச்சனைகளில் ஒன்றாக ஒற்றை தலைவலி உள்ளது. சாதாரண தலைவலியைப் போல் இல்லாமல் ஒற்றை தலைவலி வந்தால் அவ்வளவு சீக்கிரம் விடாது. உலகளவில் 7 பேரில் ஒருவருக்கு ஒற்றை8 தலைவலி பாதிப்பு ஏற்படுவதாகவும், இது ஆண்களை விட பெண்களுக்கு 3 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நரம்பியல் நோயாகும், இதில் ஒரு நபர் மிதமான முதல் கடுமையான தலைவலியை அனுபவிக்கிறார், இது 4-72 மணி நேரம் நீடிக்கும், மேலும் அடிக்கடி குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் ஒளி மற்றும் ஒலிக்கு அதிக உணர்திறன் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒற்றைத் தலைவலி தூண்டுபவை (காரணிகள்):
சீஸ், ஒயின், சாக்லேட், பருப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சில நாற்றங்கள், பிரகாசமான ஒளி, தூக்கக் கலக்கம், மாதவிடாய், மாதவிடாய், பயணம், வானிலை மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகளாக உள்ளன.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒற்றை தலைவலியின் தாக்கம் அதிகரித்து காணப்படலாம். ஏனென்றால் உடலில் அப்போது ஹார்மோன் அளவு குறைவதால் தலைவலி உருவாகலாம் என கருதப்படுகிறது. மெனோபாஸ் காலத்தில் 3ல் 2 பெண்களுக்கு ஒற்றை தலைவலி ஏற்படுவது குறைகிறது, சிலருக்கு மெனோபாஸ் காலம் முடிந்த பிறகு ஏற்படுகிறது.
மார்பக புற்றுநோயை இனிமேல் எளிதாக கண்டறியலாம் : உமிழ்நீர் சோதனை மட்டுமே போதுமானது..!
ஒற்றை தலைவலியின் பல கட்டங்கள்:
ஒற்றைத் தலைவலி 4 கட்டங்களாக வெளிப்படக்கூடியது. முதற்கட்டம் ப்ரோட்ரோம், இது தலைவலிக்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் முன்பு வரை ஏற்படும். இந்த கட்டத்தில் எரிச்சல், மனச்சோர்வு, அதிகமாக கொட்டாவி விடுதல், பசி போன்றவை ஏற்படும்.
இரண்டாவதாக ஆரா கட்டம், கண்ணுக்கு முன்னால் வண்ண விளக்குகளின் பளீச் பிரகாசம், ஜிக் -ஜாக் கோடுகளை பார்ப்பது போன்ற உணர்வு, உடலில் உணர்வின்மை, கூச்ச உணர்வு இல்லாது போதல் ஆகியவை ஆகும். ஒற்றை தலைவலி இந்த கட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாமலும் ஏற்படக்கூடும்.
மூன்றாவது கட்டம் 4-72 மணிநேரம் நீடிக்கும் தலைவலி மற்றும் நான்காவது கட்டம் ஹேங்கவுட் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஆகும், அப்போது பாதிக்கப்பட்ட நபர் பொதுவாக உடல்நிலை சரியில்லாமல், எரிச்சல் மற்றும் குழப்பத்துடன் இருப்பார்.
டீன் ஏஜ் வயதினர் மத்தியில் விஸ்வரூபமெடுக்கும் முடி உதிர்வு பிரச்சனை : என்ன காரணம்..?
குழந்தைகளுக்கும் ஒற்றைத் தலைவலி வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இரு பெற்றோர்களும் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தால் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி ஏற்படக்கூடிய வாய்ப்பு 75 சதவீதம் உள்ளதாகவும், அதுவே ஒரு பெற்றோருக்கு மட்டுமே ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால் குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதமாக இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை இது வழக்கமான தலைவலியாக இல்லாமல் தொடர்ந்து வாந்தி எடுப்பது, வயிற்று வலி ஆகியவை ஒற்றை தலைவலியின் அறிகுறிகள் ஆகும்.
சிகிச்சை முறை:
ஒற்றை தலைவலியில் இருந்து தப்பிக்க மது அருந்துதல், புகைப்பிடித்தல், அதிகப்படியான கஃபினை உட்கொள்ளுதல், பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளுதல் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
ஆழ்ந்த சுவாசம், யோகா மற்றும் தளர்வு நுட்பங்கள் போன்ற மருந்தியல் அல்லாத சிகிச்சைகளும் ஒற்றைத் தலைவலியைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும். சிகிச்சையை மேம்படுத்துவதற்கு தூண்டுதல்களுக்கும் தொடக்கங்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ள ஒற்றைத் தலைவலி நாட்குறிப்பைப் பராமரிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம் ஒற்றை தலைவலி எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது, வலி உணர்வு, அறிகுறிகள் போன்றவற்றை மருத்துவர் அறிந்து கொண்டு, முறையான சிகிச்சை வழங்க முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Migraine Headache