முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மகா சிவராத்திரி 2022 : நோன்பு இருப்பதற்கான முக்கிய குறிப்புகள் இதோ.!

மகா சிவராத்திரி 2022 : நோன்பு இருப்பதற்கான முக்கிய குறிப்புகள் இதோ.!

Fasting Plan

Fasting Plan

Maha Shivratri 2022 | விரதம் இருப்பது என்பது னொமனித ஹார்மோன் வளர்ச்சியில் (HGH) குறுகிய கால அதிகரிப்பு மற்றும் மரபணு வெளிப்பாட்டின் மாற்றங்கள் உட்பட பல்வேறு சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஷ்ராவண மாதத்தில் வரும் சிவராத்திரி, சாவான் சிவராத்திரி அல்லது மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. சாவான் மாதத்தில் வரும் மாசிக் சிவராத்திரி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இம்மாதம் முழுவதும் சிவ பூஜைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

சவான் சிவராத்திரி வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரபலமானது. சாவான் என்பது இந்து நாட்காட்டியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாதங்களில் ஒன்றாகும், இது சிவபெருமானின் நினைவாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ஷ்ரவண மாதம் ஜூலை 14 அன்று தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் பக்தர்கள் அனைத்து திங்கட்கிழமைகளிலும் விரதம் இருந்து சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.

ஏனெனில் இந்த புனிதமான மாதத்தில் சிவபெருமான் தனது வழிபாட்டாளர்களால் மகிழ்ச்சியடைந்து, அவர்கள் மீது அருள்பாலிக்கிறார் என்று நம்பப்படுகிறது. சாவான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பின் போது, கடைபிடிக்க வேண்டியவை பற்றி நிபுணர்கள் பகிர்ந்துள்ள சில குறிப்புகள் இதோ...

"விரதம் இருப்பது என்பது னொமனித ஹார்மோன் வளர்ச்சியில் (HGH) குறுகிய கால அதிகரிப்பு மற்றும் மரபணு வெளிப்பாட்டின் மாற்றங்கள் உட்பட பல்வேறு சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய விளைவுகள் நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது மற்றும் நோய்க்கான அபாயங்களை குறைக்க உதவும். வழக்கமான இடைவெளியில் விரதம் இருப்பவர்கள் நீண்ட ஆயுள் மற்றும் உடல் எடையை குறைப்பதற்காக அதனை பின்பற்றுகின்றனர்” " என ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், விரதமிருப்பதை ஆரோக்கியமான அனுபவமாக மாற்ற, நீங்கள் சில குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.




 




View this post on Instagram





 

A post shared by Bhakti Kapoor (@gethealthyhigh)



விரதத்தை தொடங்குவதற்கு முன்:

விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள் கடைசி உணவில் புரோட்டீன் அதிகமாகவும், சர்க்கரை குறைவாகவும் இருப்பதை உறுதி செய்வது முக்கியம், ஏனெனில் இது உங்கள் மூளையில் பசி உணர்வை தூண்டுவதை குறைத்து, விரதத்தை எளிமையாக கடைபிடிக்க உதவும்.

Also Read : நல்ல கொலஸ்ட்ராலுக்கும் கெட்ட கொலஸ்ட்ராலுக்கும் என்ன வித்தியாசம்..?

விரதத்தை முடிக்கும் போது:

விரதத்தை முடிக்கும் போது சரியான உணவை உட்கொள்வது அவசியம். விரதத்தை நிறைவு செய்யும் போது காய்கறிகள், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து மற்றும் சர்க்கரை நிறைந்துள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் விரதத்தை முடிக்க முதலில் இனிப்பை எடுத்துக்கொள்ளக்கூடாது.

Also Read : எடையை குறைக்க உதவும் 7 சுவையான இந்திய உணவு வகைகள்...

விரதத்தை எளிதாக்கு சில குறிப்புகள்:

* முறையான அட்டவணையுடன் தொடங்கவும்.

*உங்களை நீரேற்றத்துடன் வைத்திருங்கள்.

*உங்கள் சாப்பிடும் போது மெதுவாகவும் கவனமாகவும் சாப்பிடுங்கள்.

* ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

*குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே உணவை சமைத்து வையுங்கள்.

*உங்கள் இரவு உணவில் புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் நல்ல அளவில் இருக்க வேண்டும்.

"உங்கள் விரத முறையை மேலும் நிலையானதாக மாற்ற இந்தப் பரிந்துரைகளைப் பயன்படுத்தவும்" என ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

First published:

Tags: Fasting, Maha Shivaratri