ஒவ்வொரு பருவமும் ஒரு புதிய சவால்களைக் கொண்டுதான் வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, குளிர்காலம் வரலாறு காணாத காற்று மாசுபாட்டைச் சந்தித்தது. காற்றின் தரம் தொடர்ச்சியாக சமீப காலமாக கடுமையான, மிக மோசமான மற்றும் அபாயகரமான வகைகளில் தொடர்கிறது. மேலும், இதில் விஷயம் என்னவென்றால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் எப்போது முடிவடையும் என்பது தெரியாத ஒன்றாக உள்ளது. நமது ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நமது முயற்சிகளை மேம்படுத்துவது காலத்தின் தேவை. பருவகால உணவு இந்த கவலையை தீர்க்க மிகவும் உதவியாக இருக்கும்.
மழைக்காலத்தில் சீசன் மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு பழம் சீத்தாப்பழம். இது வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்பு, பொட்டாசியம், தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாக விளங்குகிறது.
மழைக்காலத்தில் சீத்தாப்பழம் சாப்பிட காரணங்கள்:
நீங்கள் அடிக்கடி உடலில் அமிலத்தன்மையுடன் போராடும் ஒருவராக இருந்தால், சீத்தாப்பழம் உங்களுக்கான பழம். இதை தொடர்ந்து சாப்பிடுவது உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது இங்கே…
- ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவதுபடி, சீதாப்பழம் சாப்பிடுவது புண்களைக் குணப்படுத்தவும் அமிலத்தன்மையைத் தடுக்கவும் உதவும் என்றார்கள்.
- சீத்தாப்பழத்தில் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன; இது மென்மையான சருமத்தை பெறவும் உதவுகிறது. குளிர்காலத்தில் வறண்ட மற்றும் செதில் தோலுடன் போராடுபவர்களுக்கு சீத்தாப்பழம் குறிப்பாக உதவியாக இருக்கும்.
- சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ உங்கள் கண்கள் மற்றும் மூளைக்கு நன்மை பயக்கும்.
Must Read | மன ஆரோக்கியம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை… குடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து நிச்சயம் அறிய வேண்டியவை..!
- சீத்தாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து பெண்களுக்கு குறிப்பாக உதவியாக இருக்கும். இந்த பழம் ஹீமோகுளோபினை மேம்படுத்த உதவுகிறது மற்றும் பயோ-ஆக்டிவ் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. இப்பழம் ஒபேசோஜெனிக் (obesogenic), நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீத்தாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு அதிலிருந்து மீள நன்மை பயக்கும்.
- சீத்தாப்பழம் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகும். மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் உடல் எடை குறைப்புக்கு உதவுவதற்கும் சீத்தாபழங்களை நீங்கள் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.
- சீத்தாப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் ஒரு கனிமமாகும். ஆனால், சீத்தாப்பழத்தை அதிகம் சாப்பிடுவது உடல்நலக் கோளாறுகளை கூட ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மஞ்சள், இஞ்சி மற்றும் கீரை வகைகளும் மழைக்காலத்தில் நீங்கள் உட்கொள்ள வேண்டிய மற்ற சிறந்த உணவுகள். உங்கள் உணவில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள், உள்நாட்டில் கிடைக்கும் பருப்பு வகைகள், கொட்டை வகைகள் மற்றும் விதைகள் நிறைந்திருப்பதை உறுதி செய்யவும். இவற்றுடன், நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் தூக்கத்தை சரிபார்க்கவும், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலை முற்றிலும் தவிர்க்கவும், குறிப்பாக, முடிந்தவரை மன அழுத்தத்தை தவிர்க்கவும் என்கின்றனர் நிபுணர்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.