நேற்று பிக்பாஸ் வெற்றியாளரான , சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 40 வயதே ஆன அவருக்கு மாரடைப்பு வந்திருப்பது இன்றைய காலகட்டத்தி இயல்பாக மாறிவிட்டது என மருத்துவர்ஜள் கூறுகின்றனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு இதயநோய் நிபுணர், சுபெந்து மொஹன்ட்டி பேசியுள்ளார். அதில் “ கடந்த 10-15 வருடங்களைக் காட்டிலும் இன்றைய சூழலில் இளைஞர்களிடம் மாரடைப்பு என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக கடந்த 2 வருடங்களில் இந்த மாரடைப்பின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதுவும் 18 மறும் 20 வயது டீன் ஏஜ் பிள்ளைகள் கூட மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
இதற்கு என்ன காரணம்..?
”இதற்கு முக்கிய காரணங்களாக இளைஞர்களிடம் அதிகரித்துள்ள புகைப்பிடித்தல் பழக்கம். இரண்டாவது அதிக அளவிலான மன அழுத்தம். இது வேலை அல்லது சொந்த வாழ்க்கை காரணங்களால் உண்டாகிறது. மூன்றாவது மிக முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாமை மற்றும் மோசமான வாழ்க்கைமுறை “ என கூறுகிறார் மருத்துவர். சிலர் அதிகமாக மருந்து , மாத்திரைகளை உட்கொள்கிறார்கள் எனில் அதன் பக்கவிளைவுகள் காரணமாகவும் மாரடைப்பை எதிர்கொள்கின்றனர்.
மாரடைப்பை தவிர்க்க என்ன வழிகள் :
உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, , நீரிழிவு நோய் இருப்பின் அவற்றையெல்லாம் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அதற்காக தொடர்ச்சியாக மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெற வேண்டும்.
அப்படி ஒருவேளை மேற்கூறிய பிரச்னைகள் எதுவுமே இல்லை எனில் இந்த விஷயங்களை கடைபிடியுங்கள்.
சைக்கிளிங் செல்லும்போது ஹெல்மெட் அணிவது அவசியம் : பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ட்வீட்
தினமும் 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். குறிப்பாக இதயத்தின் இயக்கத்தை சீராக்கும் சைக்கிளிங், நீச்சல் , ஓட்டப்பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள்.
தொடர்ச்சியாக வேலையில் மட்டும் கவனம் செலுத்தாலும் அவ்வப்போது குடும்பத்தினரிடமும் பேசுங்கள். அவர்களுடன் வெளியே செல்லுங்கள். பிடித்த விஷயங்களை செய்யுங்கள். டிவி பார்ப்பது , செல்ஃபோன் பார்ப்பது உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வாகாது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக தவிருங்கள். ஒருநாளைக்கு ஒன்று என மாற்றிக்கொண்டாலும் அது நிவாரணம் கிடையாது.
மன அழுத்தத்தை தவிர்க்க வாரம் ஒரு முறை இந்த 5 விஷயங்களை செய்தாலே போதும்..!
உங்கள் மகிழ்ச்சிக்கு எப்போதும் உத்திரவாதம் கொடுங்கள். தேவையில்லாமல் பிர்ச்னைகளை மனதில் குப்பைகளாக சேர்த்து வைக்காதீர்கள்.
தினமும் 200-250 கிராம் காய்கறி, பழங்களை சாப்பிடுங்கள். உப்பு அதிகம் சேர்க்காமல் குறைத்துக்கொள்ளுங்கள். குளிர்பானங்களை முற்றிலும் தவிருங்கள்.
நீங்கள் உணவை இப்படி சாப்பிட்டால் 100 வயது வரை நோய் நொடியின்றி இருப்பீர்கள்..!
இவற்றையெல்லாம் முறையாக, சரியாக கடைப்பிடிக்கிறீர்கள் எனில் 95-98 சதவீதம் உங்களுக்கு எந்த பாதிப்பும் வர வாய்ப்பு இல்லை என மருத்துவர் சுபெந்து மொஹன்ட்டி கூறுகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.