நீங்கள் சிக்கனை கழுவி சமைக்கிறீர்கள் என்றால் அந்த பழக்கத்தை இனி கைவிடுமாறு உலக சுகாதார சேவை எச்சரிக்கிறது. அவ்வாறு செய்வதால் கிருமிகள் பரவுவதாகவும் தெரிவித்துள்ளது.
வீட்டில் சிக்கன் வாங்கி வந்தால் அதிலிருக்கும் கிருமிகள் , அழுக்குகளை அகற்ற உடனே தண்ணீரில் போட்டு கழுவுவோம். ஆனால் அவ்வாறு செய்வதால்தான் கிருமிகள் அதிகரிக்கிறதாம்.
அதாவது பொதுவாக பச்சைக் கறியில் காம்பிலோபாக்டர் மற்றும் சால்மொனெல்லா (salmonella) என்கிற கிருமிகள் இருக்கும். இந்த கிருமிகளின் மீது நீர் பட்டால் அது தன் பெருக்கத்தை அதிகரிக்குமாம்.
ஏனெனில் இந்தக் கிருமிகள் மனித உடல், விலங்குகள், தண்ணீர் என வாழக் கூடியது. அதனால் நீங்கள் நீர் கொண்டு கழுவதால் அவை அழிந்து போவதில்லை. அதன் உற்பத்தியை பெருக்குகிறது என யூ.கே உலக சுகாதார சேவை கூறியுள்ளது.
மேலும் அதை நம் வீட்டில் கழுவும்போது நீரின் மூலம் சிங்க் தொட்டிகளிலும், கிச்சன் வைத்திருக்கும் பொருட்களிலும் , நம் உடல் ஆடை என பரவுமாம். எனவே சிக்கனை வாங்கி வந்ததும் அதைக் கழுவக் கூடாது என்றும், நீரில் ஊற வைக்கக் கூடாது என்றும் சுகாதர அமைப்பு எச்சரிக்கிறது.
அதற்கு பதிலாக குறைந்த வெப்ப அளவிலான கொதி நீரில் சிக்கனைப் போட்டுக் கழுவலாம் என்கிறது. அந்த நீரில்தான் சிக்கனை அலசி சுத்தம் செய்ய வேண்டும். அப்போது அந்த வெப்ப நீரில் கிருமிகள் அழிந்து விடும் என்றும் கூறுகிறது. அந்த சுடு நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்தும் சிக்கனை கழுவலாம்.
இதேபோல்தான் ஆடு, மீன் என மற்ற அசைவ உணவுகளுக்கும் அடங்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.