தர்பூசணிப் பழம் 96 சதவீதம் நீர்ச்சத்துக் கொண்டது. அதனால்தான் வெயில் எட்டிப்பார்க்கத் தொடங்கிய அடுத்த நொடி தர்பூசணிகளின் சந்தை லாபம் ஈட்டுகிறது. உடல் வெப்பத்தை தணிப்பதோடு பசியை போக்குகிறது. உடல் எடைக் குறைக்க நினைப்போரும் இதை குடிக்கலாம். வெயில் எரிச்சலால் அவதிப்படும் கர்ப்பிணிகளும் இதை சாப்பிடலாம். சரி எப்படி வித்தியாசமான சுவையில் செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தர்பூசணி - ஒரு பவுல்
சர்க்கரை - 2 ஸ்பூன் ( தேவைப்பட்டால் )
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
புதினா இலைகள் - 3
செய்முறை :
தர்பூசணியை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதோடு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறும் பிழிந்து கொள்ளுங்கள்.
மைய அரைத்ததும் சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஐஸ் கட்டிகளை போடுங்கள். அதில் புதினா இலைகளையும் தூவுங்கள். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் அப்படியே வையுங்கள்.
10 நிமிடங்கள் கழித்து கலக்கிக் குடித்தால் தொண்டைக்கு மட்டுமல்ல உடலுக்கே ஜில்லென இருக்கும்.
குறிப்பு : எலுமிச்சை, புதினா சேர்க்காமல் பாலை நன்குக் காய்ச்சி ஃபிரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டிகளுக்கு பதில் பாலை ஜூஸில் கலந்து குடித்தால் இன்னும் சுவை கூடும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.