இன்றைய பெண்கள் வீடுகளில் அசைவ உணவு மசாலாவும் எண்ணெய்யும் அதிகமாக கலந்து சமைக்கிறார்கள். அப்படி சமைத்தால்தான் சுவை மிகுதியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்து சமையலைப் பற்றி தெரிந்து கொண்டால் ஆச்சரியபடுவீர்கள். பாட்டியின் நாட்டு வைத்தியம் போல் நம் முன்னோர் காலத்து உணவு தயாரிக்கும் முறையும் மிக எளிமையாகவும் சுவையாகவும் இருந்தது.
தேவையான பொருட்கள்:
நாட்டுக் கோழி - கால் கிலோ,
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு, பச்சை மஞ்சள் துண்டு - 1
மிளகு, சீரகம் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கோழியை அவித்து வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் துண்டையும் மிளகையும் சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கூழ் போல அம்மியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு விறகு அடுப்பில் சிறிய மண் சட்டியை வைத்து முதலில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். தேங்காய் எண்ணெய் சேர்த்தால் நல்லது. அதன் பிறகு கடுகு, சீரகம் இரண்டையும் போட்டு சிறிது வதக்கி விட வேண்டும். அத்துடன் கருவேப்பிலையை சேர்க்கலாம்.
பின்பு ஏற்கனவே வேக வைத்த நாட்டுக் கோழியை எடுத்து சட்டியில் போட்டு சிறிது நேரம் எண்ணெய்யில் வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்த மஞ்சள், மிளகு கலவையை கோழியுடன் சேர்த்து பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வேக வைத்துவிட்டு எடுத்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க... உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அழற்சி எதிர்ப்பு உணவுகள் என்னென்ன?
சாப்பிடும் போது இந்த சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் மசாலாக்களை போல் நம் வயிற்றுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிடும் அளவுக்கு சுவை மிகுதியாக இருக்கும். விறகு அடுப்பு இல்லையென்றால் கேஸ் அடுப்பிலேயே சமைக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chicken Recipes, Food